இளம்பிள்ளை இடங்கணசாலை நகராட்சி பஸ் நிலையத்திற்கு உள்ளே தனியார் வாகனங்கள் நிறுத்த தடை.

 

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பஸ் நிலையத்தில் உள்ளே தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் அங்கு போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகின்றன. இதனை அடுத்து மகுடஞ்சாவடி காவல்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்திற்குள் தனியார் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என தகவல் பலகை வைத்தும், வாகனத்தை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பயணிகளுக்கும், பஸ் ஓட்டுனர்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

செல்வராஜ் இளம்பிள்ளை நிருபர்.