மேட்டூர் 12.10.22.

   மேட்டூர் அணை அமைந்துள்ள மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பாசனத்திற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்று மத்திய மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் அவர்களிடம்  மேட்டூர் எம்.எல்.ஏ கோரிக்கை வைத்தார்.  மத்திய மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர்  இன்று மேட்டூர் வந்தார்.  மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான திப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள உபரிநீர் நீரேற்று திட்ட பணிகளை பார்வையிட்டார்.

பணிகளின் நிலவரம் பயனடையும் மக்கள் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.  பின்னர் நிரம்பிய நிலையில் உள்ள மேட்டூர் அணையை பார்வையிட்டார். அணையின் வலது கரை இடது கரைஆய்வு சுரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேட்டூர் அணை நீர்வரத்து நீர் திறப்பு நீர் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.   அப்போது மத்திய இணை அமைச்சரிடம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் மேட்டூர் அணை அமைந்துள்ள மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பாசனத்திற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு டி எம் சி தண்ணீரை வழங்கினால் இப்பகுதி வளம் பெறும் என்றும் தெரிவித்தார். இது குறித்த விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு பணித்துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி கோவை பெங்களூர் மட்டுமே உள்ளது சேலம் மாவட்டத்திலும் அமைத்திட வேண்டும் என்றும், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றும் மேட்டூரில் இருந்து சேலம் வழியாக சென்னை எக்மோர் செல்லும் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் கூறினார்.

பெங்களூரின் கழிவுகள் காவிரியில் கலப்பதால் நீர் மலம் பாதிக்கிறது அந்த கழிவுகள் காவிரியில் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து தரங்கம்பாடி வரை காவிரியில் இரு கறைகளையும் பலப்படுத்தி கழிவுகளை கலப்பதை தடுத்து தூய்மையான காவிரியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை விடுத்தார்.    

ஜினித் குமார் செய்தியாளர் , மேட்டூர் அணை.