ஆட்டையாம்பட்டியில் பெய்த கன மழையால் சிக்னல் கம்பம் முறிவு.


சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள
எஸ். பாலம் வளைவு பகுதியில் விபத்து நடப்பதை தவிர்க்கும் பொருட்டு சென்டர் மீடியன் மற்றும் சிக்னல் கம்பம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக சேலம் மாவட்டம் முழுவதும் இரவில் கனமழை பெய்து வந்தது. நேற்று அதிகாலையில் கன மழை பெய்ததாலும் ,சிக்னல் கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்த காரணத்தாலும் விடியற்காலையிலயே சிக்னல் கம்பம் சாலையின் நடுவில் உடைந்து விழுந்துள்ளது. இதனால் சுமார் 3 மணி நேரம் ஒரு வழி பாதையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பெயரில் பணியாளர்கள் விரைந்து வந்து உடைந்த சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்தனர்.

செல்வராஜ்  செய்தியாளர். இளம்பிள்ளை.