மகுடஞ்சாவடியில் காளியம்மன் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு ,மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.


சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி உலகப்பனூரில் காளியம்மன் கோயிலில் உள்ளது. இந்த கோயிலில் தினந்தோறும் பூஜையும், மாசி மாதத்தில் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 10-ம் தேதி அன்று கோயில் பூசாரி கணேசன் பூஜை செய்துவிட்டு மாலையில் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கோயில் பூட்டை உடைத்து கோயிலில் இருந்த உண்டியலை எடுத்துக்கொண்டு அதில் இருந்த சுமார் ரூ. 20, 000 மதிப்புள்ள பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை காட்டில் வீசி சென்றுள்ளனர். இது குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பெயரில் போலீசார் விரைந்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இத் திருட்டு குறித்து மகுடஞ்சாவடி பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 5-க்கு மேற்பட்ட இடங்களில் திருட்டும், 4 இடங்களில் திருட முயற்சியும் நடைபெற்றுள்ளன என்றும், இப்பகுதியில் மட்டும் தொடர் திருட்டு நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றோம் என்றும் , இது குறித்து காவல் உயர் அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு கூடுதலாக போலீசாரை நியமித்து திருட்டு நடைபெறாமல் இருக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

செல்வராஜ்  செய்தியாளர். இளம்பிள்ளை.